இயேசு சிலுவையில் கூறிய 7 வார்த்தைகள்..
 இயேசு சிலுவையில் கூறிய 7 வார்த்தைகள்...

*முதல் வார்த்தை

 பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். 

லூக்கா 23:34


*இரண்டாம் வார்த்தை

இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 

லூக்கா 23:43


*மூன்றாம் வார்த்தை :

அதோ, உன் மகன் ,அதோ, உன் தாய் என்றார்.

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 

யோவான் 19:26

பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். 

யோவான் 19:27


*நான்காம் வார்த்தை :

ஏலி! ஏலி! லாமா சபக்தானி,

ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 

மத்தேயு 27:46

*ஐந்தாம் வார்த்தை

தாகமாயிருக்கிறேன்.

அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 

யோவான் 19:28


*ஆறாம் வார்த்தை

முடிந்தது. 

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். 

யோவான் 19:30



* ஏழாம் வார்த்தை

பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்

இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். 

லூக்கா 23:46


போதகர் P.பால் எபநேசர்

ஜெப  உதவிக்கு  +919444193444