தேவனின் பரிபூரணம்

தேவனின் பரிபூரணம்

===================

    நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள

விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.

 1 தீமோத்தேயு 1:14

 இந்தக் குறிப்பில் பரிபூரணம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி , எவையெல்லாம் தேவனின் பரிபூரணம் என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்

1. பரிபூரண கிருபை

 அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். 

யோவான் 1:16

 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிகநிச்சயமாமே. 

ரோமர் 5:17

2. பரிபூரண நன்மை 

உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். 

உபாகமம் 28:11

 அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார். 

உபாகமம் 30:9

3. பரிபூரண சமாதானம்

இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். 

எரேமியா 33:6

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக

யோவான் 14:27

4. பரிபூரண ஈவு

 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிகநிச்சயமாமே. 

ரோமர் 5:17

5. பரிபூரண ஜீவன்

 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். 

யோவான் 10:10

6. பரிபூரண சித்தம்

 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். 

ரோமர் 12:2

7. பரிபூரண ஆனந்தம்

 ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு. 

சங்கீதம் 16:11

மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன். உங்களைக் குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன். 

2 கொரிந்தியர் 7:4

8. பரிபூரண ஆசீர்வாதம்

 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்: 

நீதிமொழிகள் 28:20

 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான், 

மத்தேயு 13:12

மத்தேயு 25:29

9. பரிபூரண இயல்பு

 அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். 

எபேசியர் 3:19

 சகல பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கவும், 

கொலோசெயர் 1:19

10. பரிபூரண தேவத்துவம்

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.

மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். 

கொலோசெயர் 2: 9,10

11,பூரணவடிவு

பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.

சங்கீதம் 50:2

 சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன், உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.

சங்கீதம் 119:96

 உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

ஏசாயா 26:3

 இந்த  வார்த்தையின்படி  தேவனுடைய பரிபூரணம் என்னென்ன என்பதை இந்தக் குறிப்பில் நாம்  சிந்தித்தோம். அவருடைய பரிபூரணத்தால் நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றிருக்கிறோம். அவருடைய பரிபூரணம் நம் யாவருக்கும் கிடைப்பதாக !

கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக 

ஆமென் !

Please share and subscribe to our Youtube channel

https://youtube.com/shorts/5l_8gVwnlU8?si=-2eBtr4fECb5Qqc9

 God bless you

ஜெப உதவிக்கு 9444193444