தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு,..
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக்கண்டு தாழ விழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது, 

யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்! 

அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது. 

 அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும், அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும், அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான், அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும். 

தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்,; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு, அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள். 

சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிப்கப்பட்டவன் என்றான். 

எண்ணாகமம் 24:4- 24:9

எருசலேமுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்

PRAY FOR ISRAEL

ஜெய உதவிக்கு:9444193444