சென்னையில் இதுவரை 37,070 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 19,686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 501 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 16,882 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 60.09 சதவீதம் ஆண்கள், 39.90 சதவீதத்தினர் பெண்கள், 0.01 சதவீதத்தினர் மூன்றாம் பாலினத்தனவர் ஆவர்.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,828 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4,743 பேரும், தேனாம்பேட்டையில் 4,504 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
ராயபுரம் - 5,828
தண்டையார்பேட்டை - 4,743
தேனாம்பேட்டை - 4,504
கோடம்பாக்கம் - 3,959
அண்ணா நகர் - 3,820
திரு.வி.க.நகர் - 3,244
அடையாறு - 2,144
வளசரவாக்கம் - 1,571
திருவொற்றியூர் - 1,370
அம்பத்தூர் - 1,305
மாதவரம் - 999
ஆலந்தூர் - 781
பெருங்குடி - 729
சோழிங்கநல்லூர் - 707
மணலி - 525