தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும்.அமைச்சர் விஜயபாஸ்கர்...

தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 46,504-ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.  


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,20,922-லிருந்து 3,32,424-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,195-லிருந்து 9,520-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379-லிருந்து 1,69,798-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11,502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 1843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கூறியதாவது;


 


* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 25,344 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 797 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


 


* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 479-ஆக உயர்ந்துள்ளது.


 


* சென்னையில் இன்று ஒரே நாளில் 1257 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 33,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 


* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 79 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 20,678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


* தமிழகத்தில் இதுவரை 7,29,002 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.


* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.49% ஆக உள்ளது.


* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,403 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1438 பேருக்கு தொற்று உறுதியானது.


* கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும்.


* தடுப்பூசிகள், மருந்துகள் இல்லமால் சிகிச்சை அளிக்கும் முறையை அரசு பின்பற்றுகிறது.


* தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் நடத்தப்படுவதால், விரைவில் குணப்படுத்தப்படுகிறது.


* மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரசை அரசு கட்டுப்படுத்தி வருகிறது.


* மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம்.


* வல்லரசு நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன தமிழக அரசு களத்தில் நின்று போராடி வருகிறது.


* கொரோனா தொடர்பான எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை,மறுக்கவும் இல்லை.


* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;


 


     *மகாராஷ்டிரா - 18


     


     *டெல்லி - 11


 


     *கேரளா - 3


 


     *ராஜஸ்தான் - 2


 


     *கர்நாடகா - 4


 


     *ஆந்திரப்பிரதேசம் - 1


 


     *உதிர்ப்பிரேதேசம் - 1


 


     *ஒடிஷா - 1


 


 


* *வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்


 


     *துபாய் - 1


 


     *அரபு எமிரேட்ஸ் - 1


 


     *கத்தார் - 4


 


     *மலேசியா - 2


 


    *தோஹா - 1


 


    * மஸ்கட் - 4