தமிழகத்தில் மேலும் 2396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 56,845-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,80,532-லிருந்து 3,95,048-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,573-லிருந்து 12,948-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,04,711-லிருந்து 2,13,381-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 375 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 2174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 31,321 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 1045 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 704-ஆக உயர்ந்துள்ளது.
* சென்னையில் இன்று ஒரே நாளில் 1254 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 39,641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 85 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 24,882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் இதுவரை 8,61,211 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 55.09% ஆக உள்ளது.
* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,231 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 2396 பேருக்கு தொற்று உறுதியானது.
* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 35,19 ஆண்கள், 21,806 பெண்கள், 20 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்
*மகாராஷ்டிரா - 12
*டெல்லி - 22
*கேரளா - 4
*ஆந்திரப்பிரதேசம் - 1
*கர்நாடகா - 6
*அசாம் - 1
*கோவா - 3
* *வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்
*சிங்கப்பூர் - 1
*ஓமன் - 14