தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 866-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,654 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 2865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 67,468-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.


 


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,40,215-லிருந்து 4,56,183-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,011-லிருந்து 14,476-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,190-லிருந்து 2,58,685-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 465 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15,968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 2865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;


 


* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 37,763 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2.424 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


 


* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 866-ஆக உயர்ந்துள்ளது.


 


* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,654 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 44,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 


* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 88 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 28,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 


* தமிழகத்தில் இதுவரை 9,76,431 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


 


* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


 


* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.


* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.70% ஆக உள்ளது.


 


* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


 


* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 32,709 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 2865 பேருக்கு தொற்று உறுதியானது.


 


* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 41,678 ஆண்கள், 25,770 பெண்கள், 20 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


 


* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;


     *மகாராஷ்டிரா - 08


     


     * டெல்லி - 14


 


     * கேரளா - 06


 


     * மேற்கு வங்கம் - 02


 


     * கர்நாடகா - 14


 


     * தெலுங்கானா - 1


 


     * குஜராத் - 03


 


     * ஒடிஷா - 01


 


     * ராஜஸ்தான் - 05


 


     * உதிர்ப்பிரேதேசம் - 02


 


     * பஞ்சாப் - 01


 


     * ஹரியானா - 01


 


     * மத்தியப்பிரேதேசம் - 01


 


     *மணிப்பூர் - 01


 


** வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்


 


     * அரபு எமிரேட்ஸ் - 01


 


     * கத்தார் - 06


 


     * சிங்கப்பூர் - 4


 


     * மலேசியா - 01


 


     * சவூதி அரேபியா - 3


 


     * குவைத் - 15


 


     * நைஜிரியா - 01