தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 19 பேர் உயிரிழந்துள்ளனர்.


மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


இதில் 1,897 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். மீதமிருப்போர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்.


 இதுவரை தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,841ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 19,333 பேர் குணமடைந்துள்ளனர்.


தற்போது 17,179 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.


சென்னையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும்


அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்..


சேலம் மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது; நோயாளிகள் அதிகரிப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா நோயாளிகளை கவனமுடன் அரசு கையாண்டு வருகிறது எனவும் கூறினார். சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் உள்ளன. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அதிக அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் ஆரம்ப நிலையில் நோயை கண்டறிய முடிகிறது எனவும் கூறினார்.


வெளியில் இருந்து சேலம் வந்த 263 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை இல்லாமல் இன்று தான் தமிழகத்தில் அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா நோய் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை முறைகளை கடைபிடிக்கிறோம். சாதாரண சளி, இருமல் இருந்தாலும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும். சென்னையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.