பரிசோதனை செய்து கொண்ட நபரின் குடும்ப உறுப்பினர்களும் 14 நாட்கள் தனிமைப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 1875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


அதேபோல பரிசோதனை செய்து கொண்ட நபரின் குடும்ப உறுப்பினர்களும் 14 நாட்கள் தனிமைப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள 6000 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1875 பேருக்கு இந்நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் புதிதாக 1406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 


மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில் . இதில் 1837 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 12 பேர் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். மீதமுள்ளவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.


 


ஆகவே, தமிழ்நாட்டில் இதுவரை இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,716ஆக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1372 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,705ஆக உயர்ந்துள்ளது.


 


 **தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டு உள்ளதால், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


 


எனவே, இதற்கு கூடுதலாக பிசிஆர் கருவிகள் தேவை என்பதால், தென்கொரியாவில் இருந்து வாரம் ஒரு லட்சம் என்ற அளவில் பிசிஆர் கருவிகள் வரவழைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை, சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்து விட்டதாகவும் , வரும் வாரங்களில் 1 லட்சம் பி.சி.ஆர். கிட்கள் வீதம் மேலும் 5 லட்சம் பி.சி.ஆர். கிட்கள் வர இருப்பதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.