தமிழகத்தில் இன்று (ஜூன் 16) ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆகவும், பலி எண்ணிக்கை 528 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 61 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 48,019 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 79 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 19,242 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,48,244 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய உயிரிழப்புகளில் 35 பேர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 26,782 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20,706 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
**இன்று அடையாளம் காணப்பட்ட 1,515 பேரில் 919 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆகவே ஒட்டுமொத்தமாக சென்னையில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,245ஆக உயர்ந்துள்ளது.
இன்று செங்கல்பட்டில் 88 பேரும் நாகப்பட்டினத்தில் 38 பேரும் ராணிப்பேட்டையில் 60 பேரும் திருவள்ளூரில் 52 பேரும் திருவண்ணாமலையில் 64 பேரும் காஞ்சிபுரத்தில் 46 பேரும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 528 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 422 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். திருவள்ளூரிலும் செங்கல்பட்டிலும் தலா 30 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த 49 பேரில் 3 பேர் வேறு எவ்வித உடல்நல பிரச்சனைகளும் இல்லாதவர்கள். 35 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 14 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 5 பேர் ஐம்பது வயதுக்குட்பட்டவர்கள். 4 பேர் 80 அல்லது 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். 33 பேர் ஆண்கள். 16 பேர் பெண்கள்.