சென்னையில் இன்று அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 70 பேருக்கும், திரு.வி.க.நகரில் 38 பேருக்கும், வளசரவாக்கத்தில் 32 பேரும், அம்பத்தூரில் 31 பேரும், அண்ணாநகரில் 25 பேரும், தேனாம்பேட்டையில் 24 பேருக்கும், ராயபுரத்தில் 22 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தண்டையார்பேட்டையில் 13 பேரும், அடையாறு 9 பேரும், மாதவரத்தில் 3 பேரும், திருவொற்றியூரில் 3 பேரும், மணலியில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 3 பேரும், பெருங்குடியில் 3 பேரும், ஆலந்தூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 1,103 பேருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 49.48 %சதவிகிதம் பேர் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது
மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:
*திரு.வி.க.நகர் மண்டலம் -395
*ராயபுரம் மண்டலம் -321
*கோடம்பாக்கம் -327
* தேனாம்பேட்டை -230
*அண்ணா நகர் -169
*தண்டையார்பேட்டை -149
*வளசரவாக்கம் -146
*அம்பத்தூர் - 98
*அடையாறு -53
*திருவொற்றியூர் -32
*மாதவரம் -27
*பெருங்குடி -15
*ஆலந்தூர் -11
*மணலி-13
*சோழிங்கநல்லூர் -13
ஆரம்பம் முதலே வட சென்னையில் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் மட்டும் 865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 43% சதவீதமாகும்.
அதேபோல், கடந்த சில நாட்களாக சென்னை மத்திய மண்டலத்தில் தொற்று வேகமாக பரவி வருகிறது கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம் மண்டலங்களில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது. இது சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 43.3 சதவீதமாகும்.
தமிழகத்தில் மே 5-ம் தேதி உறுதி செய்யப்பட்ட 508 தொற்றுகளில், சென்னையில் புதிய உச்சமாக 279 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் பாதித்துள்ள 2008 பேரில், 327 பேர் குணமடைந்துள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர்.