2008-ல் இவர் எழுதிய End of Days: Predictions and Prophecies about the End of the World என்ற நூலின்2020-ல் கொரோனா வெடிக்கும் எனவும், அதன் கோர கரங்கள் உலகையே சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கும் எனவும் 12 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு எழுத்தாளர் கூறியிருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. 2013-ல் மறைந்த பிரபல எழுத்தாளர் சில்வியா பிரவுன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
2008-ல் இவர் எழுதிய End of Days: Predictions and Prophecies about the End of the World என்ற நூலின் 312-வது பக்கம் இன்று உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை அப்படியே படம்பிடித்து காட்டுகிறது. இதன் தமிழாக்கம்; 2020 வாக்கில் நிமோனியா போன்ற ஒரு நோய் உலகம் முழுவதும் பரவும். நுரையீரல்களையும், சுவாச குழாய்களையும், பாதித்து அது பலருக்கு எமனாக முடியும். எந்த மருந்தாலும் அதை கட்டுப்படுத்தவோ, ஒலிக்கவோ முடியாது. அதே சமயம் அதில் ஆறுதல் தரக்கூடிய ஒரு செய்தியும் இருக்கிறது. அதாவது எந்த வேகத்தில் இந்த நோய் பரவுமோ, அதே வேகத்தில் அது மறைந்து விடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.