தற்போது மாணவி அமுல்யாவைக் கொல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெகுமதியளிக்கப்படும் என ஸ்ரீராம் சேனா பிரமுகர் சஞ்சீவ் மராதி கூறியிருக்கிறார். அத்தோடு, காவல்துறை அமுல்யாவை வெளிவர விடக்கூடாது என்றும் வெளியே விட்டால் கொலை செய்துவிடுவேன் என்றும் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.
மாணவி அமுல்யாவின் பேச்சுக்காக பெங்களூரு காவல்துறை, தேச துரோகச் சட்டம் 124(A) உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. அமுல்யாவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அவருடைய வீட்டைத் தாக்கியதோடு, அவரின் தந்தை வாஜியை ‘பாரத் மாதா கீ ஜெய்’ சொல்ல வைத்தனர். தன் மகள் செய்தது தவறு என்றும் அவரை ஆதரிக்கப் போவதில்லை என்றும் வாஜி கூறினார். அது காணொளியாக வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டது.
இதனிடையே, அமுல்யாவின் பேச்சு தவறாக விளங்கப்பட்டு விட்டதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பாதியில் பேச்சை நிறுத்தியதால்தான் அது பிரச்னைக்குரியதாய் ஆகிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அமுல்யா தனது முகநூல் பக்கத்தில், எந்த நாடாக இருந்தாலும் எல்லா நாடுகளும் நலமாக இருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், இலங்கை என அனைத்து நாடுகளும் வாழ்க எனும் பொருளிலும் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமுல்யாவை ஆதரித்து பேனர் பிடித்ததற்காக அவரின் தோழி ஆர்திரா நாராயணன் என்பவரைக் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். அமுல்யாவுக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்வினையாக அவர் ஒரு சார்டில் ”முஸ்லிம், தலித், காஷ்மிரி, பகுஜன், ஆதிவாசி, மாற்றுப் பாலினத்தார் விடுதலை” என எழுதி எடுத்துச் சென்றுள்ளார். இந்தப் பின்னணியில், மத, இன ரீதியில் அவர் பகைமையை ஏற்படுத்துவதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
மாணவி அமுல்யாவைக் கொல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெகுமதியளிக்கப்படும் என ஸ்ரீராம் சேனா அறிவிப்பு .காவல்துறை வெளியே விட்டால் கொலை செய்துவிடுவேன் என்றும் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.. .