துணிச்சல் இருந்தால் மத்திய அரசு ஐ.நா. கண்காணிப்பில், இந்த குடியுரிமைச் சட்டம் குறித்தும், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தட்டும் என்று சவால் விடுத்தார் மம்தா பானர்ஜி.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து அகதிகளாக வந்து இந்தியாவில் தங்கியுள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையிலான குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய பாஜ அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் உள்பட குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

கொல்கத்தாவில் 4-வது நாளாக மமதா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் நடைபெற்றது.  நாடு விடுதலை அடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த தேசத்தை பாஜக பிளவுபடுத்தி வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறும் வரை நமது போராட்டங்கள் தொடர வேண்டும். ஐநா அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்ற எந்த வித சார்பும் இல்லாத அமைப்பு பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்தை அறிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கேவலப்படுத்தும் வகையில் சொத்துக்களை அழிக்கும் அதே வேளையில், பிஜேபி அதன் உறுப்பினர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. பாஜக 1980-ல் நிறுவப்பட்டது, 1970-ம் ஆண்டின் எங்கள் குடியுரிமை ஆவணங்களைக் கேட்கிறது. மற்றவர்களின் தயவில் நாங்கள் இந்த நாட்டில் வாழவில்லை. சுதந்திரம் அடைந்த 73 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று நாம் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமாம். அந்த நேரத்தில் பாஜகவின் தலை மற்றும் வால் எங்கே இருந்தது, பாஜக நாட்டை பிளவுபடுத்துகிறது. உங்கள் எதிர்ப்பை நிறுத்த வேண்டாம், ஏனெனில் நாங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறுகிறோம் என கூறினார்.