அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்படுவதற்கு முன்பு திருடப்பட்ட உள்ளாடை

அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்படுவதற்கு முன்பே டி என் ஏ பரிசோதனைக்காக அவரின் உள்ளாடையை தங்கள் உளவாளி திருடியதாக குர்துக்கள் தலைமையிலான தலைமையிலான சிரியா ஜனநாயகப் படை(SDF) கூறுகிறது.


சிரியாவில் உள்ள அமெரிக்க சிறப்பு படையினர் தங்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்பு பாக்தாதியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணியில் தாங்கள் மிக தீவிரமாக ஈடுபட்டதாகவும் சிரியா ஜனநாயகப் படையின் மூத்த தளபதி போலேட் கேன் தெரிவித்துள்ளார்.


தாக்குதலின்போது பாக்தாதி தானே தன் உயிரை மாய்த்து கொண்டார்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதலில் குர்திஷ் படைகளின் பங்கு குறித்து அதிகம் கூறவில்லை.


அக்டோபர் 27 அன்று தாக்குதல் குறித்து அறிவித்தபோது, குர்துகள் "பயனுள்ள" தகவல்களை வழங்கியதாகக் டிரம்ப் கூறினார், ஆனால் அவர்கள் "ராணுவ நடவடிக்கையில் ஈடுபடவில்லை" என்றும் டிரம்ப் கூறினார்.


திங்களன்று வெளியிட்ட ஒரு ட்வீட்டில் ''இந்த தாக்குதலில் எஸ்.டி.எஃப் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது'' என்று கேன் வலியுறுத்திக் கூறினார்.