எனது தகப்பனார் T. பவுல்ராஜ் இலக்கிய செல்வர் டாக்டர் திரு குமரி அனந்தன்...
எனது தகப்பனார் T. பவுல்ராஜ் இலக்கிய செல்வர் டாக்டர் திரு குமரி அனந்தன்..
எங்கள் இல்லத்திற்கு வந்து எங்களோடு உறவாடி சாப்பிட்டு சந்தோஷத்தோடு சென்ற நாட்களை நான் மறக்க முடியாது 

என் தங்கையின் திருமணத்திற்கு வீட்டிற்கு வந்து வாழ்த்துவதற்கு எங்கள் வீட்டில் எங்களை சந்திக்க வந்த அந்த சமயத்தில் மூன்றாவது மாடியில் இருக்கும் எங்களுடைய வீட்டுக்கு ஏறும் போது என் கைகளை பிடித்து அவர் பேசிக் கொண்டு வந்த காலங்களை நான் மறக்க முடியாது

எனது தகப்பனார் T. பவுல்ராஜ் இலக்கிய செல்வர் டாக்டர் திரு குமரி அனந்தன் மற்றும் அவருடைய நண்பர்கள் ஒன்றாக சென்னை மெரினா பீச்சிலே இரவு நேரத்தில் சந்திப்பது வழக்கம் அப்படி சந்திக்கின்ற அந்த சமயத்தில் அவருக்கு பிடித்தமான வேர்க்கடலை உப்புக்கடலை பட்டாணி ஆகிய பொருட்களையும் என் தகப்பனார் எடுத்துக்கொண்டு செல்வார் அவர் ஆசையாய் அதை சாப்பிட்டு 
அரசியல் காரியங்களை ஆலோசிப்பது அவர்களுக்கு வழக்கமானது 

எனது அக்காளுடைய ( எஸ்தர் )திருமணத்திற்கு அன்று அவருடைய உடல்நிலை சரியில்லை. மருத்துவர்கள் தயவு செய்து எங்கும் போக வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்த போதிலும் எங்கள் இல்ல திருமணத்திற்கு கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து நான் மெரினா பீச்சில் வாக்கிங் செல்வதாக சொல்லி தன்னுடைய நண்பர்களுக்கு போன் மூலம் அழைத்து அவர் எங்கள் இல்ல திருமணத்துக்கு வந்து கலந்து கொண்டார் திரு குமரி அனந்தன் அவர்கள்

ஒரு சமயம் அவர் வீட்டுக்கு நான் சென்றபோது அவர் இப்பொழுது எளிமையான ஒரு தோற்றத்தோடு இருப்பார் அந்த எளிமையான தோற்றத்திலும் புத்தகங்களுக்கு நடுவே அவர் நாற்காலி ( Chair ) போட்டு என்னையும் அமர சொல்லி நாங்கள் சிறிது நேரம் அவரோடு அந்த ரூமில் பேசிக் கொண்டிருந்த அநேக காரியங்கள் உண்டு 

இலக்கியச் செல்வர் திரு குமரி ஆனந்தன் அவர் அவர்களுடைய அந்த மணி விழா காலத்தில் நான் அவருக்கு கொடுத்த பரிசுத்த வேதாகமம் ( Bible )அதை அவர் வாசித்து பல திருமணங்களுக்கு செல்லும் பொழுது கானாவூர் கல்யாணத்தை பற்றி அவர் பேசியிருக்கிறார் 
தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு இலக்கியச் செல்வர் குமரி ஆனந்தன் அவர்களோடு நான் பேசிய சமயத்தில் அவர் அவருடைய வீட்டுக்கு என்னை அழைத்ததை நான் மறக்க முடியாது
93 வயதில் நல்ல ஞாபகம்.
தனது நண்பனுடைய மகன் என்று என்னிடம் அநேக முறை தொலைபேசியில் நாங்கள் பேசியிருக்கிறோம் அவ்வளவு ஏழ்மையான குணம் உடையவர் அவர் காமராஜரின் சீடர்